×

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு முடிவு என தகவல்?

சென்னை : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக அரசு இதுகுறித்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு சூரப்பா மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரிக்க உள்ளார். பதவியில் இருந்து கொண்டு விசாரணையை மேற்கொள்வது சரியாக இருக்காது என கருத்து நிலவுவதால் தமிழக அரசு சூரப்பாவின் சஸ்பெண்ட் குறித்து பரிசீலணையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

Tags : Surappa ,Government of Tamil Nadu ,Anna University , Anna, University, Vice-Chancellor, Surappa, Suspended
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...