×

மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாரத்தில் 2 நாள் மின்தடை

பொன்னேரி: மீஞ்சூர் மேற்கு பிரிவிற்குட்பட்ட மின்சார வாரியம் சார்பில், பழுதடைந்த பழைய 11 கேவி மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட உள்ளன. இதன் காரணமாக. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மழை காலத்தில் ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.     

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மீஞ்சூர் மேற்கு பிரிவிற்குட்பட்ட  சில பகுதிகளில் பழுதடைந்த பழைய 11 கேவி மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட உள்ளது. இதனால் மீஞ்சூர் மேற்கு பிரிவிற்குட்பட்ட பகுதிகளான கேசவபுரம், நாலூர், சிறுவாக்கம் மற்றும் மீஞ்சூர் நகர் பிரிவிற்குட்பட்ட மதுரா நகர் நந்தியம்பாக்கம் ஆர்எஸ் சாலை பகுதிகளில் பணிகள் முடியும் வரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.’’ இவ்வாறு அவர் கூறினார்.  
    



Tags : area ,Minjur , Power outages 2 days a week in Minjur area
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி