×

திருவில்லி. ஆண்டாள் கோயிலில் ஒன்றாக காட்சியளித்த 6 தெய்வங்கள்; தீபாவளி திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவில்லிபுத்தூர்: தீபாவளி திருநாளை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது கவுசிக, தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தீபாவளி ஆகிய தினங்களில் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி, ஆகியோர் ஒன்றாக காட்சி அளிப்பது வழக்கம். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் இந்த தெய்வங்கள் ஒன்றாக காட்சியளித்தன.

இதற்காக பெரிய பெருமாள் சன்னதியில் இருந்து பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகிய சுவாமிகள் மேளதாளங்கள் முழங்க ஆண்டாள் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் ஆறு தெய்வங்களும் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆண்டாள் சன்னதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : deities ,Thiruvilli. 6 ,devotees ,occasion ,Andal ,Deepavali ,Darshan , Thiruvilli. 6 deities appearing together in the Andal temple; Many devotees visit Darshan on the occasion of Deepavali
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...