×

இந்தியாவில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05%-ஐ நெருங்கியது.. மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.29 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 88.14 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 41,100 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88,14,579 ஆக உயர்ந்தது.
* புதிதாக 447 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,29,635 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,156 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை  82,05,728 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,79,216 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 93.05% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.47% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.48% ஆக குறைந்துள்ளது.

* இந்தியாவில் ஒரே நாளில் 8,05,589 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
* இதுவரை 12,48,36,819 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.



Tags : recovery ,India ,Department of Health , Corona in India, Recovered, Ratio 93.05, Health
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...