×

கந்தசஷ்டி திருவிழா நடத்தக்கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் பாரம்பரிய முறைப்படி கந்தசஷ்டி திருவிழாவை சமூக இடைவெளியுடன் நடத்தக்கோரி கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் புருஷோத்தமன், மாவட்டத் தலைவர் சங்கர் ராஜா, மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணசர்மா, இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் பீமபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Demonstration ,Kovilpatti ,festival , Demonstration at Kovilpatti demanding Kandasashti festival
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா