×

ஒரு பைசா கூட நான் லஞ்சம் வாங்கவில்லை... நான் ஏன் பதவி விலக வேண்டும்.. :அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பேட்டி

சென்னை : அண்ணா பல்கலைக்கழக நியமனத்தில் ஒரு பைசா கூட நான் லஞ்சமாக பெறவில்லை என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அரியர் தேர்வு விவகாரம், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அரசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, எனக்கு எதிராக தமிழக அரசு விசாரணைக்குழு அமைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் என் மகள் பணி புரியவில்லை. அண்ணா பல்கலைக்கழக நியமனத்தில் ஒரு பைசா கூட நான் லஞ்சமாக பெறவில்லை. பணி நியமனத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை.மிரட்டல்களுக்கு அடிபணியாததால் என்மீது அவதூறு புகார்களை கூறுகின்றனர்.பெயர் குறிப்பிடாமல் சில மிரட்டல் கடிதங்களும் எனக்கு வந்துள்ளன.தமிழக அரசின் விசாரணை பற்றி எனக்கு கவலை இல்லை. எதையும் சந்திக்க தயார்.என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கிறதா என்பதை கல்வியாளர்கள் கூற வேண்டும்.ஆளுநர் உட்பட யாரையும் நான் சந்திக்கபோவதில்லை. புகார்கள் மூலம் அண்ணா பல்கலை.க்கான எனது பணிகளுக்கு இடையூறு செய்ய முடியாது. எந்த முறைகேட்டில் ஈடுப்படாதா நான் ஏன் பதவி விலக வேண்டும், என்றார்.


Tags : Surappa ,Anna University , Anna University, Vice-Chancellor, Surappa
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...