சென்னை: அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க தமிழக அரசு இன்று விசாரணை குழு அமைத்தது. விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சியளிப்பதாக சூரப்பா தெரிவித்திருந்த நிலையில் இன்று மாலை நாளை காலை ஆளுநரை சந்திக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.