×

தூத்துக்குடி கலெக்டர் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: தேர்தலுக்காக பணி மாற்றம் என தகவல்

சென்னை: நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்பட 7 மாவட்ட கலெக்டர்கள் என 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: அதில் தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தலை மனதில் கொண்டே தற்போதைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு சில கலெக்டர்கள் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் புகாரின் பேரிலேயே மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags : relocation ,IAS officers ,Thoothukudi Collector , Sudden relocation of 14 IAS officers, including Thoothukudi Collector: Information as to job change for the election
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம்...