×

எரிவாயு குழாய் அமைக்க விளைநிலங்களை சேதப்படுத்துவதா?.: மதுரை அருகே பணிகளைத் தடுத்து விவசாயிகள் போராட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை போராட்டம் நடத்தி விவசாயிகள் நிறுத்தியுள்ளனர். சென்னை எண்ணூரில் இருந்து மதுரை மாவட்டம் கப்பலூருக்கு சுமார் 540 கிலோ மீட்டர் தொலைவில் ஐ.ஓ.சி நிறுவனம் எரிவாயு கொண்டு செல்கிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் கொட்டப்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.  

அலங்கப்பட்டி கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை நாசப்படுத்தி குழாய் பாதிக்க நிலத்தை அந்த நிறுவன ஊழியர்கள் நொண்டியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். விவசாயிகள் எதிர்ப்பால் குழாய் பாதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.

எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை மாற்றுப் பாதையில் அமைக்க ஏற்கனவே கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதன் படி மாற்றுப் பாதையில் குழாய் பதிக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Tags : farmland ,Madurai , Damage to farmland to build gas pipeline?.: Farmers protest near Madurai to stop work
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...