சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இருந்து எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என எழுத்தாளர் அருந்ததி ராய் தெரிவித்துள்ளார். பாடத்திட்டத்தில் எனது புத்தகம் கற்பிக்கப்பட்டதே இப்போதுதான் எனக்குத் தெரியும். இலக்கியங்கள் தொடர்பாக இப்போதைய அரசு காட்டும் அலட்சியப் போக்கு மிகப் பாதகமானது என்றும் தெரிவித்துள்ளார்.