சென்னை: சென்னைக்கு நீர் ஆதாரமான ஏரிகளின் நீர் வரத்தை கண்காணிக்க மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளின் நீர் இருப்பு, நீர் வரத்தை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.