×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடிமகன்களுக்கு தாராளமாக கிடைக்க டாஸ்மாக்கில் விதவிதமான சரக்கு குவிப்பு

திருவள்ளூர், :தீபாவளியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் இருப்பு வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.தீபாவளி தினத்தன்று தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு சரக்கு கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி விற்பனையை கருத்தில்கொண்டு 60 சதவீதம் கூடுதல் சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. மொத்தம் 15 நாட்களுக்கு தேவையான சரக்குகள் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது ரூ.20 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் இருப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என, கடை சூப்பர்வைசர்கள், ஏரியா சூப்பர்வைசர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

டாஸ்மாக் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் தட்டுப்பாடின்றி, விரும்பிய சரக்குகள் கிடைக்கும் வகையில், குடோன்களில் இருந்து சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி விற்பனை நடைபெறும் என நினைக்கிறோம்’ என்றார்.

Tags : public ,Diwali , Deepavali Festival, Citizen, Tasmag
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...