×

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும்: வானிலை மையம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்க கடலில் இலங்கை முதல் வட தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளிவிட்டு மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்து வரும் இரு நாட்களுக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று அதிகாலை முதல் சென்னை முழுவதும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது.

Tags : districts ,Chennai ,Kanchipuram ,Tiruvallur ,Weather Center ,Chengalpattu , Heavy rain, weather center
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...