×

பெத்தநாயக்கன் பாளையம் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை...சிலை, கவசம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு.: 3 பேர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோயிலில் சிலை மற்றும் கவசங்களை கொள்ளையடித்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பெத்தநாயக்கன் பாளையம் கல்லெறி பட்டியில் உள்ள மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து சிலை, வெண்கல கவசம், வெள்ளி வேல் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததாக ராகவன் உள்ளிட்ட 3 பேரை ஏத்தாப்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிலை, வெண்கல கவசம், வெள்ளி வேல் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதியில் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுக்கள் காவல்துறையினரை ரோந்து பணியில்  ஈடுப்பட கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Bethanayakkan Palayam Mariamman , Bethanayakkan Palayam Mariamman temple lock broken and looted ... Statue, shield and other items recovered: 3 arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...