×

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல் ஹாசன் டுவிட்

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : junction ,Tamil Nadu ,Kamal Hassan Dwight , Law and order junction laughs in Tamil Nadu: Kamal Hassan tweeted
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...