சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: அமமுக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தமிழன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகிறார். அமமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு ெகாறடாவுமான மனோகரன் பொருளாளராகவும், திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்படுகிறார்.ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பார்த்திபன் தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.அமமுக பொருளாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.