×

விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் அதிர்ச்சி காசியின் லேப்டாப்பில் இளம்பெண்களின் 1000 ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள்: 5 நாள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைப்பு

நாகர்கோவில்: சமூக வலைதளங்களில் இளம்பெண்களுடன் பழகி அவர்களை காதலிப்பதுபோல் நடித்து பலாத்காரம் செய்ததுடன், ஆபாச வீடியோக்கள் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதாகி உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (27) மீது ஏற்கனவே 6 புகார்கள் பதிவாகி இருந்தது. சமீபத்தில் மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் சிபிசிஐடி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து, காசியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
காசியின் லேப்டாப்பில் அழிக்கப்பட்ட வீடியோக்கள், போட்டோக்களை எடுப்பதற்காகவும், எந்தெந்த ஐ.டி.யில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பதை கண்டறியவும் சைபர் க்ரைம் சிறப்பு குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் உள்ளன. 1000த்துக்கும் அதிகமான வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன என போலீசார் கூறி உள்ளனர். இதற்கிடையே 5 நாள் விசாரணை முடிந்து நேற்று மாலை காசியை நாகர்கோவில் ஜே.எம். 1 வது கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.


Tags : Kasi ,Kashi , CBCID officials investigating 1000 1000 pornographic videos and photos of teenagers on the laptop of the shocked Kasi: 5 days of police custody and re-imprisonment
× RELATED தேர்தலில் தோற்பதற்கென்றே ஆள்...