ஆவடி: ஆவடி அடுத்த பங்காருபேட்டை, கள்ளிகுப்பம், பெருமாள் கோவில் தெருவில் மயிலாடுதுறையை சேர்ந்த பிரான்சிஸ் (24), விக்னேஷ்(23), ராஜதுரை (24), ரமேஷ் (23) ஆகிய தனியார் நிறுவன ஊழியர்கள் வசிக்கின்றனர். அவர்களது வீட்டில் மர்மநபர் புகுந்து அவர்கள் வைத்திருந்த 4 செல்போன்களை திருடிச் சென்றார். புகாரின்படி ஆவடி டேங்க் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, பனையஞ்சேரி கிராமம், பெருமாள் கோயில் தெருவைச்சேர்ந்த பிரகாஷ் (29) என்பவர் செல்பொனை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த பிரகாஷை நேற்று கைது செய்து 4 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.