மதுரை: எம்.எல்.ஏ கருணாஸ் கொலை மிரட்டல் விடுப்பதாக முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் பாண்டித்துரை ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். கருணாஸ், அவரது ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என பாண்டித்துரை தெரிவித்துள்ளார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.