டெல்லி: பேரறிவாளன் உட்பட 7 பேரையும் வரும் 23-ம் தேதிக்குள் விடுவிப்பது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு நல்லது என்று மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் திட்டவட்டமான கருத்து தெரிவித்துள்ளார். இன்னும் 12 நாட்களில் 7 பேர் விடுதலை பற்றி முடிவெடுப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. மேலும் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்பதுதான் சட்டப்படி நியாயமான செயல் என அவர் தெரிவித்துள்ளார்.