×

பண்ணாரி அம்மன் கோயில் அருகே வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை: வீடியோ வைரல்

சத்தியமங்கலம்:  பண்ணாரி அம்மன் கோயில் அருகே சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை யானை தாக்க முயற்சித்த வீடியோ வைரலாகி வருகிறது.தமிழகம் - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய சாலையாக ஈரோடு அடுத்த திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. மலைக்கிராமங்களுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும், பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக செல்கின்றனர். பண்ணாரி சோதனைச்சாவடி அருகே முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம் கரும்பு லாரிகளை தேடி குட்டிகளுடன் உலாவுகின்றன.

நேற்று மதியம் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காத்திருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதையில் இருந்து சென்று கொண்டிருந்த வாகனத்தை சாலையோரம் நின்று கொண்டிருந்த யானை துரத்தியது.   இதனைத் தொடர்ந்து பண்ணாரியில் இருந்து மைசூர் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளையும் யானை தாக்க முயற்சித்தால் அவர்கள் திரும்பி சென்றனர். யானையின் அட்டகாசத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோரம் திரியும் யானைகள் திடீரென தாக்க முற்படுவது அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யமால் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

Tags : motorists ,temple ,Pannari Amman , Near Pannari Amman Temple The lone elephant that chased motorists: Video viral
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு