குமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தளர்வில் விவேனாந்தர் பாறைக்கு செல்ல முதல்வர் பழனிசாமி அறிவித்தும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வராததால் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளன. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.