×

சுயக்கட்டுப்பாடுடன் தீபாவளியை கொண்டாடினால் கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்தலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

திருச்சி: மக்கள் சுயக்கட்டுப்பாடுடன் தீபாவளியை கொண்டாடினால் கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்தலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அளித்த பேட்டி: உலகத்தில் இரண்டாம் அலை அடிக்கும் நேரத்திலும் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் 16ம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு ஓரிரு நாளில் கலந்தாய்வு நேரில் நடைபெறும். மக்கள் சுயக்கட்டுப்பாடுடன் தீபாவளியை கொண்டாடினால் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தலாம். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.

Tags : Diwali ,Vijayabaskar ,wave ,Corona , Celebrating Diwali with self-control can curb Corona 2nd wave: Minister Vijayabaskar
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...