×

தொண்டி அருகே கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

தொண்டி: தொண்டி அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மூழ்கிய படகை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே லாஞ்சியடி பகுதியை சேர்ந்த பிரமுடாஸ் (45) என்பவரின் படகில், நேற்று அதிகாலை மீன் பிடிக்க பிரமுடாஸ், லிங்கம், ரவி  உட்பட 4 பேர் சென்றனர். அப்போது கடலில் பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்துள்ளது. இதனால் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்து சத்தமிட்டனர். அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு கரை சேர்த்தனர். படகு முற்றிலுமாக கடலில் மூழ்கியது.


Tags : fishermen ,sea ,Tondi , Rescue of 4 fishermen stranded at sea near Tondi
× RELATED திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி