×

பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்

புவனகிரி: பரங்கிப்பேட்டை அண்ணங்கோவில் கடற்கரை பகுதியில் நேற்று மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அண்ணங்கோவில் கடலோர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது மஞ்சள் நிறத்தில் கோபுர கலச வடிவில் கிடந்த பொருளை மீட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் அந்த பொருள் பரங்கிப்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், அந்த பொருள் கடற்கரை பகுதியான புதுக்குப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் அனல் மின் நிலையத்திற்கு சொந்தமானது என்றும்,

அனல் மின் நிலையத்தின் பைப் லைன்கள் கடலுக்கு அடியில் செல்வதால் பைப் லைன்கள் இருக்கும் இடம் குறித்து மீனவர்களுக்கு தெரிவிக்கும் போயா என்ற மிதவை கருவி எனவும் தெரிய வந்தது. இது கடலில் மிதக்கும் போது அறுந்ததால் அலையில் அடித்து கொண்டு வந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி, தனியார் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமானதுதானா? என்பதை உறுதி செய்த பிறகு உரிய வழிமுறைகளுடன் தனியார் நிறுவனத்திடம் அந்த பொருள் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.



Tags : beach ,Parangipettai , Mysterious object hidden on the beach near Parangipettai
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை