×

சமூக ஊடகங்களில் கொரோனா மருந்து, முதல்வர் குறித்து வீடியோ வெளியிட்ட சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து: ஐகோர்ட்


சென்னை: சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சமூக ஊடகங்களில் கொரோனா மருந்து, முதல்வர் குறித்து வீடியோ வெளியிட்டதை அடுத்து சித்த மருத்துவர் தணிகாசலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கொரோனா தொற்றை தடுக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை தமிழக அரசு புறக்கணிப்பவதாகவும் கூறி சமூக ஊடகங்களில் முதலமைச்சருக்கு எதிராக தணிகாச்சலம் வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தை கடந்த மே மாதம் 6ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் மக்களிடம் கொரோனா சிகிச்சை செய்வதாக கூறி பணம் பறித்ததாக அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.

தொடர்ந்து, தனது மகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தணிகாசலம் தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது இந்தியாவில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்காதது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.  இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, புழல் சிறையில் அடைக்கப்பட்ட சித்த மருத்துவர் தணிகாசலதின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


Tags : Corona ,Thanikachalam ,Chief Minister ,thug , Corona Drug, Chief, Paranormal Physician Censor, Thug, Cancel, iCourt
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...