×

நகை திருட்டு

ஆவடி: ஆவடி ராஜ்பாய்நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கல்கிராஜ்(54). செக்யூரிட்டி நிறுவனம் நடத்துகிறார். கடந்த 5ம் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான விருத்தாச்சலம் சென்றார். பின்னர், நேற்று மீண்டும் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு 3 சவரன் தங்க காயின்கள், இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

Tags : Jewelry theft
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி