×

தொடர் மழையால் பல்லாங்குழியான விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை சாலை

சேத்தியாத்தோப்பு: விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலை தொடர் மழையில் பல்லாங்குழியானதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் தொடர்மழையின் காரணமாக மழைநீர் சாலையில் தேங்கி நிற்கின்றது, மேலும் தினந்தோறும் இவ்வழியே சேலம், சிதம்பரம், மயிலாடுதுறை விருத்தாசலம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு 500 க்கும் மேற்பட்ட பேருந்துகளும், கனரக வாகனங்களும், சென்று வருகின்றன.

மழைநீர் தேங்கியதால் சாலையில் பெரிய அளவில் பள்ளம் உருவாகி இரு சக்கர வாகனங்களில் செல்வோரை பதம் பார்த்து வருகிறது. சாலைப்பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள் தரமான சாலையை அமைக்காததால் சாலை பல்லாங்குழியாகவும், படுகுழியாகவும் மாறிப் போனதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சை வாகனமான 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவைகள் இந்த சாலையில் செல்லும்போது பள்ளத்தில் மெதுவாக செல்வதால் தாமதம் ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சேதமடைந்துள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .இது குறித்து இப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், புவனகிரி தொகுதி திமுக எம்எல்ஏ துரை.கி.சரவணனிடம் மனு அளிக்க உள்ளனர்.



Tags : road ,Vriddhachalam-Parangipettai , Vriddhachalam-Parangipettai road dilapidated due to continuous rains
× RELATED சீத்தஞ்சேரி கூட்டுச் சாலையில்...