மதுரை: குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு ரூ.10,000, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரிகளுக்கு ரூ.15,000 அபராதம் விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளத்தில் பிடித்தம செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையை எதிர்த்து அதிக எண்ணிக்கையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குள் தொடரப்படுகின்றன.