×

உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி: போலி நாட்டுக்கோழி முட்டைகள் பறிமுதல்

கரூர்: கரூரில் விற்பனை செய்த போலி நாட்டுக்கோழி முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். கரூர் பஸ்நிலையம் அருகே மார்க்கெட் வளாகத்தில் முட்டை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதில் புல்லட் முட்டைகளை மொத்தமாக வாங்கி சாயமேற்றி சூடுசெய்யப்பட்ட தண்ணீரில் கலந்து வெள்ளை நிற முட்டையை பிரவுன் நிறத்துக்கு மாற்றி அதனை நாட்டுக்கோழி முட்டை என விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மதுரைவீரன், மார்க்கெட் வளாகத்தில் நேற்று அதிரடி சோதனை செய்தார். அப்போது அந்த பகுதியில் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதோடு, அவர் வைத்திருந்த 18.5 கிலோ எடையுள்ள முட்டைகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தார்.

Tags : Eggs, confiscated
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்