×

புதிய பாதிப்புகளை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு... இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.96% ஆக சரிந்தது!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.26 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 85 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக  பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 45,903 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  85,53,657 ஆக உயர்ந்தது.
* புதிதாக 490 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,611 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 48,405 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 79,17,373 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,09,673 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* குணமடைந்தோர் விகிதம் 92.56% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.48% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.96% ஆக குறைந்துள்ளது.

Tags : survivors ,victims ,India , India, Corona, Treatment Rate
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...