×

தமிழகத்தில் மேலும் 2,334 பேருக்கு கொரோனா: சுகாதார துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 75,384 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 2,334 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் சென்னையில் 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,43,822 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,386 பேர் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக 7,13,654 பேர் குணமடைந்துள்ளனர். எனினும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18,894 ஆக குறைந்துள்ளது. நேற்று 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,344 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu: Health Department , Corona for 2,334 more in Tamil Nadu: Health Department information
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...