×

சூளகிரி அருகே சின்னாரில் ஒற்றை யானை முகாம்; விரட்டும் பணி தீவிரம்

சூளகிரி: சூளகிரி அடுத்த சின்னார் பகுதிக்கு போடூர் பள்ளத்தில் இருந்து வந்த ஒற்றை யானையை விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போடூர் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. இப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை நேற்று அதிகாலை ரமாபுரம், காமன்தொட்டி, சப்படி, குருபராத்தப்பள்ளி, மேடுபள்ளி, சென்னப்பள்ளி ஆகிய கிராமங்கள் வழியாக சின்னார் பகுதிக்கு வந்தது. அப்போது விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.

ஒற்றை யானை சின்னார் பகுதியில் முகாமிட்டுள்ளதை அறிந்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் ராயக்கோட்டை ரேஞ்சர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து, ஒற்றை யானையை ராயக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யானை முகாமிட்டுள்ளதால், சின்னார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்கள் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம். வெளியே நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : elephant camp ,Choolagiri ,Chinnar , Choolagiri, Chinnar, Elephant Camp, Exodus
× RELATED காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்