ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கருங்கல்பாளையத்தில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி, மகன்கள், மகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, மனைவி சிவகாமி, மகன்கள் பிரேம், புவனேஷ், மகள் ஷாலினி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.