திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரீப் முகமதுகான் டிவிட்டரில் ெவளியிட்டுள்ள குறிப்பில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அச்சப்படும்படி எதுவும் இல்லை. கடந்த வாரம் ெடல்லியில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அல்லது தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்,’ என கூறியுள்ளார்.