×

தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்ய 20 நாக்குகளை அதிமுக கொண்டிருக்கிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேலூர்: தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்ய இரட்டை நாக்குகளை அல்ல 20 நாக்குகளை அதிமுக கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சென்னையிலிருந்து காணொளி மூலம் பங்கேற்று ஸ்டாலின் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் சிறுபான்மையினருக்கு அதிமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு செய்யும் துரோகங்களுக்கு துணை போகும் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரு நொடி கூட ஆட்சியில் இருக்க தகுதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு நலன் காக்கும் ஒவ்வொரு விவகாரத்திலும் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழர்களின் கலை, கலாச்சாரத்திற்கு ஆபத்து வந்துள்ளதாக ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை மத்தியில் ஆளும் பாஜக சிதைக்க முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒற்றை இனம், ஒற்றை மதம், ஒற்றை மொழி கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற பாஜக முயற்சிப்பதாகவும் அதற்கு தலையாட்டும் அதிமுக அரசுக்கு முடிவு கட்டவே அடுத்த சட்டமன்ற தேர்தல் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் மீட்போம், மாநில சுயாட்சி என்ற கம்பீரத்தை காப்போம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Tags : AIADMK ,Tamils ,Tamil Nadu ,Stalin , Stalin, accusation, we will recover Tamil Nadu
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு