×

நெய்வேலி நகர போலீசின் சித்ரவதையால் கைதி மரணம் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடலூர்: கைதி செல்வமுருகன் நெய்வேலி நகர போலீசின் சித்ரவதைக்கு பலியாகி இருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சியில் காவல்துறை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தடுமாறுகிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். செல்வமுருகன் மரணம் குறித்து தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். செல்வமுருகனை காவல் நிலையம் அழைத்து வந்தது உண்மையான வழக்கிற்காகவா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கம் போல் மறைத்து காவல்துறையின் எஞ்சியுள்ள பெருமையையும் முதல்வர் சீர்குலைத்து விட வேண்டாம். சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு பின் உயர்நீதிமன்றம் எச்சரித்தும் கஸ்டடி மரணங்கள் தொடர்கின்றன.

Tags : Neyveli ,city police torture prisoner ,MK Stalin , Stalin, indictment
× RELATED தேர்தல் காலங்களில் ேமாசமான சட்ட வரம்பு மீறல்களை பாஜ அரசு செய்கிறது