×

தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை அ.தி.மு.க தொடங்கிவிட்டது: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: தேர்தலில் தில்லுமுல்லு செய்வதற்கு உண்டான நடவடிக்கைகளை அதிமுக தொடங்கிவிட்டது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக திமுக ஆதரவாளர்களை, பெயர்களை நீக்கியுள்ளனர் என குறிப்பிட்டார். மேலும் கரூரில் முறைகேடு செய்யவே ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags : AIADMK ,Bharathi ,elections , Election, Thillumullu, AIADMK, RS Bharathi
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...