திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயில் விடுதிகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருத்தணியை சேர்ந்த ஹர்ஷவர்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முருகன் கோயிலுக்கு சொந்தமான விடுதிகளில் பாலியல் தொழில் நடக்க ஊழியர்கள் உடந்தை என மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.