டெல்லி: உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் வித்தியாசமான பல பிரச்சனைகள் எழுந்துள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதில் நவீன தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.