கோவை: கோவை மாவட்டம் அவினாசி சாலை அண்ணா சிலை அருகே தனபால் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக தனபால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்துகொண்ட தனபால் உடலை மீட்டு கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.