சென்னை: தீபாவளி பண்டிகையின் போது குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார். குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருந்தால் தான் தீபாவளி கொண்டாட்டமாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். முக்கிய இடங்களை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த உள்ளோம் என்று ஆணையர் கூறியுள்ளார்.