×

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாம்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாம்பூரில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்புப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தொடர் பயங்கரவாத தேடுதல் வேட்டையில் பகல் 12 மணியளவில் ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். மேலும் தொடர்ந்து பயங்கரவாதிகளுடனான என்கவுண்ட்டர் நீடித்தது.  இதில், இன்று மாலை 4 மணியளவில் மற்றொரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.  பாம்பூர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பயங்கிரவாதகளின் இடத்தை நேருங்கிய போது பாதுகாப்பு படையினரை நோக்கி அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பயங்கிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால், காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  அவர்களை அடையாளும் காணும் பணி நடந்து வருகிறது.  இதேபோன்று தேடுதல் வேட்டையும் தொடர்ந்து நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Tags : terrorists ,security forces ,Pampore ,Jammu and Kashmir , In Pampore, security forces, in a shootout, 2 people. Shot dead
× RELATED வாலிபர் கைது ரயில்வே பாதுகாப்பு படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு