சென்னை: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன என்ற பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் தான் யார் யாருடன் கூட்டணி என்பது பற்றி இறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.