×

நாளை சி-49 ராக்கெட் விண்ணில் பயணம் : திருப்பதியில் ராக்கெட் மாதிரிகளை சுவாமி பாதத்தில் வைத்து இஸ்ரோ அதிகாரிகள் தரிசனம்

திருமலை, :பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ அதிகாரிகள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், நாளை மாலை 3.02 மணிக்கு 1வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதற்காக இஸ்ரோ அதிகாரிகள் ராக்கெட் மாதிரிகளுடன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தனர். அங்கு ராக்கெட் மாதிரிகளை சுவாமி பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் பெற்றுச்சென்றனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



Tags : ISRO ,Tirupati ,Swami , C-49 rocket, voyage, Tirupati
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...