சென்னை: அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டங்களை நடத்தக்கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் மவுரியா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு தொடர்ந்த வழக்கோடு இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.