×

குடும்ப தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை

பூந்தமல்லி: பூந்தமல்லி சுமித்ரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சிவா (35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (31). திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இதனையடுத்து, சரண்யா பிரிந்து சென்று மயிலாடுதுறையில் உள்ள, தந்தை வீட்டில் இருந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெற்றோர் சமரசம் செய்து வைத்து, சரண்யாவை கணவருடன் அனுப்பி ைவத்துள்ளனர். நேற்று முன்தினம் மனைவியை வீட்டில் விட்டு விட்டு உறவினரின் திருமணத்திற்காக சிவா சென்று விட்டு  இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சரண்யா தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து, சரண்யாவை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide , Wife commits suicide by hanging in family dispute
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை