×

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை வழக்கு மனைவிக்கு கஞ்சா பழக்கம் ஏற்படுத்தியதால் அடித்து கொன்றேன்

* கைதான கணவன் பரபரப்பு வாக்குமூலம்
* மாமியார் உள்பட 3 பேர் கைது

காஞ்சிபுரம்: மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த வாலிபர், கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தியதால் அடித்து கொலை செய்ததாக கணவன், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பெரிய காஞ்சிபுரம் , ஜவகர்லால் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (32). ஆக்டிங் கார் டிரைவர் . இவரது மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். காமாட்சிக்கும், அவரது சொந்த ஊரான காரையை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ரவிச்சந்திரன், மனைவியை கண்டித்தார். ஆனால், அதனை அவர் கண்டு கொள்ளவில்லை. இதைதொடர்ந்து, கடந்த 2ம் தேதி இரவு வேலை முடிந்து ரவிச்சந்தரின் வீடு திரும்பினார்.

அப்போது காமாட்சியுடன், தினேஷ் இருந்ததை பார்த்து அத்திரமடைந்த அவர், உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தார். பின்னர், காஞ்சிபுரம் தாலுகா போலீசில் அவர் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், காமாட்சிக்கும், ரவிச்சந்திரனுக்கும் கடந்த 11 ஆண்டுககளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர், ஆக்டிங் டிரைவராக உள்ளதால், அடிக்கடி சவாரிக்காக வெளியே சென்றுவிடுவார். இதனால் காமாட்சி, காரையில் உள்ள தாய்வீட்டுக்கு செல்வார். அப்போது, காரையில் வேலையில்லாமல் சுற்றி திரிந்த தினேஷ் என்பவருடன், காமாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே கஞ்சா பழக்கம் உள்ள தினேஷ், காமாட்சிக்கும் கஞ்சா புகைக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவரும் கஞ்சா போதையில் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், நாளடைவில் உடல் மெலிந்த காமாட்சியை, அவரது தாய் செல்லம்மாள் (55) கண்டித்துள்ளார். ஆனாலும் தினேஷ் மற்றும் காமாட்சி இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரவிச்ந்திரன், மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு காமாட்சி, தினேஷுடன் இருந்ததை பார்த்த ரவிச்சந்திரன், உருட்டுக் கட்டையால் தாக்கியதில் அவர் இறந்தார். இதையடுத்து சடலத்தை பொக்லைன் இயந்திரத்தில் எடுத்து சென்று, சிறுவாக்கம் ஏரிக்கரையில் புதைத்தார் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர்.தொடர்ந்து போலீசார், ரவிச்சந்திரன், அவரது மனைவி காமாட்சி (26), தாய் செல்லம்மாள் (55) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags : love affair ,death , I was beaten to death because my wife was addicted to cannabis in the case of the murder of a young man in a fake love affair
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு