×

வெளிமாநிலங்களில் இருந்து 316 டன் வெங்காயம் கொள்முதல்: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

திருவண்ணாமலை: வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு 316 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு நடத்தினார்.  அதன்பின் அவர்  அளித்த பேட்டி:-

கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற  வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்வதால், வெங்காயம் அழுகிவிடுகிறது. மேலும், லாரிகள் கிடைக்கவில்லை. அதனால், தாமதமாகிறது.தமிழகத்துக்கு 316 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை மூலம் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. என்றார்.

Tags : Cellur Raju ,outstations , Procurement of 316 tonnes of onions from outstations: Minister Cellur Raju informed
× RELATED தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா, மோடி என...