திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதான இளம்பெண் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக வீராபுரம் கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (24) என்பவர், இளம்பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். பின்னர் கடந்த 2ம் தேதி இளம்பெண் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசில் அப்பெண்ணின் பெற்ேறார் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் நேற்று மேகநாதன் மற்றும் அந்த இளம்பெண்ணை பிடித்து, காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அப்பெண்ணிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததை மேகநாதன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் மேகநாதனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த இளம்பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.